Thursday, February 21, 2008

21.02.2008 தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வரி சலுகைகள்

தகவல் : 21.02.2008 எக்கனாமிக் டைம்ஸில்
ராசா, மத்திய அமைச்சர், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்த்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பிரதம மந்திரியும் இதை ஏற்றுள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் இத்துறைக்கு தேவையான அறிவிப்புக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்கிரோம்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான முக்கிய சலுகையான எஸ் டி பி ஐ யின் வரிச்சலுகை 2008 - 2009 நிதியாண்டுடன் முடிவடைகிறது.

அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை விளங்குவதோடு மட்டுமல்லாமல் அதனோட வளர்ச்சியும் 33% ஆகும் என்பதை நிதியமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.


தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்பு அளிப்பதில் வருடத்திற்க்கு 26% வளர்ந்துள்ளது. எற்றுமதி வளர்ச்சியிலும் இத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. இவ்வருடம் இத்துறையில் மொத்த ஏற்றுமதி 40 பில்லியன் டாலராக உள்ளது. அது 2010ஆம் வருதத்தில் 60 பில்லியன் டாலராக ஆகும். மேலும், மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில், தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு 1998ல் 1.2% சத வீதமாக இருந்த வளர்ச்சி, 2008 நிதியாண்டில் 5.3% என்று அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், ரூபாயின் நாணய மதிப்புயர்வால் கடந்த ஒரு வருடமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

Monday, February 11, 2008

11.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 2

முத முதல்ல நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பை அணுகிய அனுபவமாதலால் சுய புராணம் கொஞ்சம் நீளமா இருக்கும். பொறுதருள்க.

1998ல் நான் வெளிநாடு போக வேண்டியிருந்தது. கம்பித் தொலைபேசி(landline) இணைப்பைத் தொலைத் தொடர்புத் துறையிடம் (அப்போது அது BSNL ஆக மாறியிருந்ததா என்று நினைவில்லை) சொல்லி துண்டிக்கச் சொல்ல வேண்டும், மாதா மாதம் தொலைபேசிக்கான வாடக்கைக் கட்டணம், திரும்ப வரும்வரை கட்ட வேண்டாமென்றால். நல்ல வேளையாக வீட்டுச் சொந்தக்காரர், தொலைபேசி இணைப்பை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும்படியும், தான் அதை உபயோகப்படுத்தி விட்டு, தானே அதற்க்கான கட்டணத்தை தொலைதொடர்பு துறையிடம் அவ்வப்போது கட்டி விடுவதாகச் சொன்னார். இதுவும் நல்லதாகப் பட்டபடியால், அப்படியே செய்தேன். வேலையை முடித்துக்கொண்டு திரும்பியவுடன் தான் தெரிந்தது. வீட்டுச்சொந்தக்காரர் கடைசி 4,5 மாதங்களுக்கு தொலைபேசி கட்டணத்தைக் கட்டாததால் இணைப்பு ஏற்க்கனவே துண்டிக்கப்பட்டு விட்டது என்று. பின், தொலைத் தொடர்புத் துறைக்குச் சென்று கட்ட வேண்டிய நிலுவைத் தொகைகளையெல்லாம் கட்டிவிட்டு மறுபடி இணைப்பு கிடைக்கக் காத்திருந்தேன். 2 மாதங்கள் ஆயிற்று. இணைப்பு மறுபடியும் கிடைத்தபாடில்லை. அதைப் பற்றிய எந்தக் கடிதமும் அவர்களிடமிருந்து கிடைத்த பாடில்லை.

தொலைத்தொடர்புத் துறைக்குச் நேரடியாகச் சென்றேன். அக்கௌண்ட்ஸ் துறைக்குச் சென்றால், கமர்ஷியல் துறைக்கும், அங்கு சென்றால் அக்கௌண்ட்ஸ் துறைக்கும், மாற்றி மாற்றி அலைக்கழித்தார்கள். இப்படியே நாலைந்து மாதங்கள் ஆய்விட்டன. 5,6 முறை அங்கு போன பின் புரிந்தது, நான் நிலுவைத்தொகையைக் கட்டியபின், அந்த விபரங்கள் கணிணியில்(database) அவர்களால் பதியப்படவில்லை என்று. கடைசியாக அவர்கள் அதையும் செய்த பின், இணைப்பு மீண்டும் கிடைத்தது. இப்போது சுமார் 1 வருடம் ஓடிவிட்டது.

மனசுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு தடவை அலைந்தது, இணைப்புக் கிடைக்காமல் போனது, இணைப்பு இல்லா சமயங்களிலும் அதற்க்கான கட்டணத்தைக் கட்டியது எல்லாம்.

செய்தித்தாளில் அவ்வப்போது நுகர்வோர் குறைம் தீர்க்கும் அமைப்பைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக அதன் முகவரியைக் கண்டுபிடித்து, நடந்ததை தெளிவாக, புகாராக, எழுதி அனுப்பியவுடன், புகார் கிடைத்ததற்க்கான கடிதமும், அவ்வழக்கு இன்ன தேதியில் விசாரணக்கு வருமென்றும், அதற்க்கு நேரில் வரவேண்டுமென்ற விவரங்களும் அதில் இருந்தன.

சொன்ன தேதியில் அங்கு சென்றேன். நான் அப்போதுதான் மூச்சிரைக்க (7 மாடி என்று நினைவு) மாடி ஏறி, வழக்கு நடக்கும் அறை வாசலில் நின்றேன். அப்போதுதான் என் பெயர் அழைக்கப்பட்ட்டது. என் பெயரை சொல்லி , என்னுடைய வழக்கா என்று கேட்பதற்க்காக என் கையைத் தூக்கினேன். என் பெயரை அழைத்தவர் "நீங்கள்தான் ....."என்று கேட்க , நான் ஆமென சொல்லி உள்ளே நுழைந்தேன்.

இது வரை படங்களில் மட்டுமே பார்த்த கோர்ட்டு இருந்தது. சுமார் 1அடி உயர மேடை. அதில் பெரிய மேசை. அதன் பின் 3 நீதிபதிகள், அதில் 2 ஆண்கள், 1 பெண் உக்கார்ந்து இருந்தனர். ஆனால், சினிமாவில் வரும் கோர்ட்டில் உள்ளதுபோல் நீதிபதியெல்லாம் கறுப்பு கோட்டு எல்லாம் அணிந்திருக்கவில்லை. சாதாரண சிவிலியன் உடையில்தான் இருந்தனர். வக்கீல் யாரும் இருந்ததாக நினைவில்லை. மற்ற வழக்காடிகள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். குற்றவாளி கூண்டு எல்லாம் இருக்கவில்லை. அந்த அறை, பள்ளி/கல்லூரி வகுப்பறை மாதிரி இருந்தது. அதன்பின் அந்தப்பெண் நீதிபதி , என்ன விஷயம்(புகார்) என்றார். என் புகாரில் சொல்லியிருந்ததைச் சொல்லி, இந்த மாதிரி, தொலைத்தொடர்புத் துறையின் கவனக் குறைவால், எனக்குக் காலதாமதம் ஏற்ப்பட்டதையும், அபராதக்கட்டணம் கட்ட வேண்டியதையும் சொன்னென். அவர்கள் மூவரும் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டனர். பின், அப்பெண் நீதிபதியிடம், நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அவர் "நீங்கள் போகலாம். நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார். சில மாதங்களில் நான் கட்டிய அதிகப்படியான தொகைக்கு ஈடான கிரெடிட் கடிதம் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து வந்ததது. பின் வரும் மாதங்களில் அப்பணம் அந்தந்த மாத கட்டணங்களில் சரி செய்யப்படும் என்று.

பின் நான் மறுபடியும் குறை தீர்வு மன்றத்திற்க்கு கடிதம் எழுதினேன், எனக்கு நட்ட ஈடு வேண்டுமென. அக்கடிதத்திற்க்கு, தொலைத் தொடர்புத் துறையிலிருந்து கடிதம் வந்தது. நான் சொல்வதற்க்கு(தாமதமானதற்க்கு) எந்த ஆதாரமும் இல்லையென்றும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்.

என்னிடம் அதற்க்கான ஆதாரம்(ஓவ்வொரு முறை தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாருக்கென அத்தாட்சி) இல்லை என்பதாலும், இதற்க்குமேல் பிரச்னையை வளர்த்துக்கொண்டு போவதால் உபயோகம் இல்லை என்று பட்டதாலும், வழக்கை முடித்துக்கொளவதாக குறை தீர்ப்பு ஆணையகத்துக்கு கடிதம் எழுதினேன்.

11.02.2008 வக்கீலுக்கு கிரெடிட் கார்டு மறுப்பு - வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

தகவல் : தினமலர் 11.02.2008

வக்கீல் ஒருவர் ஐசிஐசிஐ வங்கிக்கு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் செய்யும் வக்கீல் தொழிலைக் காரணம் காட்டி வங்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அவர் டில்லி மாநில நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்க்கு அவ்வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த கோர்ட்.

நம்ம கமெண்ட் : கிரெடி கார்ட் நிராகரிப்புக்குள்ள சரியான காரணத்தை சாதாரணமாக வங்கிகள் சொல்லாது. அக்காரணத்தை அந்த வக்கீல் எப்படி அவ்வங்கியிலிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர் அவ்வாறு காரணம் கேட்டபோது, அவ்வங்கி மறுத்து விட்டதாம். அதற்க்கு ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயத்தை அணுகும்படி அவரிடம் சொல்லியிருக்கேன்.

சாதாரணமா இந்த மாதிரி விஷயங்களுக்கு இவ்வளவு அதிக அபராதம்(ரூ.10 லட்சம்) விதிக்க முடியுமான்னு தெரியவில்லை. வங்கி மேல் முறையீடு செய்தால், அபராதத்தை மிகவும் குறைத்து விடுவார்கள்.

Thursday, February 7, 2008

08.01.2008 பிர்லாசஃப்ட் - 100 பேர் வேலையிழப்பு

டிசிஎஸ்,ஐபிஎம்-க்கு அடுத்து இப்போது பிர்லாசஃப்ட்டோட(Birlasoft) முறை. அவங்க 100 மென்பொருளாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்களாம். "நாங்க ஆட்குறைப்பு ஒண்ணும் செய்யலை. அவங்களோட வேலையில முன்னேற்றமின்மை(performance) காரணாமத்தான் அனுப்புனோம்"னு அவங்க சொல்ராங்க. "அதுவும், இந்த வருடம் மட்டும் முதல் தடவையா அவங்களோட முன்னேற்றமின்மை காரணமா இருந்தால்கூட அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லலே. இதுக்கு முன்பும் வேலையில் அவங்களோட முன்னேற்றம் சரியா இல்லாததனாலதான் அவங்கள அனுப்புனோம். இந்த தடவ உள்ள அப்ரைசல்ல(Appraisal) உள்ளவங்களில் 5 சதவீதம் பேர் இப்படி பாதிக்கப்பட்டு இருப்பாங்க"ன்னு, பிர்லாசாஃப்ட் பேச்சாளர் சொன்னார்.

அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குறைவும்,அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பதிப்புக்கூடுதலும் , இதற்க்குக் காரண்னு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

கார்ட்னெரோட வல்லுனர் சொல்வது : 2:1 என்றிருந்த வேலைக்கு ஆளெடுப்பு விகிதம் 15:1 என்று கூடுனதும் இதற்க்குக் காரணம். அந்த அளவுக்கு இந்தியாவுல மென்பொருள் வேலைக்கு ஆட்கள் தயாராய் இருக்காங்க.
நம்ம கமெண்ட் : இந்த மாதிரி காரணம் இந்த மாதிரி சிரமமான சமயங்களில் மட்டும் அவங்களுக்குத் தோணுது. அப்போ இவ்ளோ நாளா நல்லா வேலை செய்யாதவனுக்கு சும்மா சம்பளம் கொடுத்திட்டு இருந்திருக்கேன்னு சொல்ராங்களா?

Wednesday, February 6, 2008

07.02.2008 ஆண்கள் உரிமைச் சங்கத்திற்க்கு நிர்வாகிகள் தேர்வு நேர்காணல்

தகவல் தினத்தந்தி 06.02.2008

ஆண்கள் உரிமைச் சங்கத்திற்க்கு நிர்வாகிகள் நேர்காணல்மூலம் தேர்வு 3 நாட்கள் நடக்கிறது.

நம்ம கமெண்ட் : நல்ல முன்னேற்றம்தான்.

Thursday, January 31, 2008

01.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 1

நாம என்ன பொருள்/சேவையை வாங்கினாலும் அதிலுள்ள குறையச் சம்மத்தப்பட்டவர்களிடம் சொல்லி நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அரசு சேவை மட்டுமல்ல தனியார் சேவையும் அதே லட்சணத்தில்தான் இருக்கு.
"என்னத்த சொல்லி என்ன பண்ண? நாம சொல்லி நடக்கவா போகுது?"ன்னு நம்ம எல்லோருக்கும் ஒரே அங்கலாய்ப்புதான். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தால் புகாரே வரவில்லை" என்று வழக்கமான பதில் கிடைக்கும். என்னமோ புகார் வந்தால் அதை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பது மாதிரி.

சமீபத்தில் படித்த செய்தி. வங்கி சம்பந்தமான 'வங்கி மத்தியஸ்த தீர்ப்பாயத்துக்கு' வந்த புகார்களில் ஆயிரம் உபயோகிப்பாளர்க்கு 0.01க்கும் குறைவாம். அதாவது, லட்சத்தில் ஒருவர்தான் புகாரே பண்ராராம். ஒரே ஒரு மேல்நாட்டு வங்கியில் மட்டும் 1000க்கு 25 பேராம். ஏனெனில்,புகார் செய்தவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் HNI(High Networth Individuals)க்கள்.

சமீபத்தில் ரயிலில் வந்தபோது உடன் வந்தவர் ஒன்று சொன்னார். அவர் ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது, கட்டணக் கழிப்பிடத்திற்க்குச் சென்றிருக்கிரார். அங்கிருப்பவர் கட்டணமாக ரூ.2 கேட்டிருக்கிறார். உடனே நம்மாள் திரும்பி வந்துட்டார். இதே மாதிரி, எனக்கு பெங்களூரில் நடந்தபோது அங்குள்ள புகார் புத்தகத்தில் புகாராக இதை எழுதிவிட்டு வந்தேன். ரயில்வேயிலிருந்து புகார் கிடைக்க்ப்பெற்ற அத்தாட்சிக் கடிதம் எனக்குச் சில தினங்களில் கிடைத்தது. அதற்க்கப்புரம், அதே மாதிரி ரயிலில் போகும் சந்தர்ப்பமோ, அங்கு கழிப்பிடத்தை உபயோகப்படுத்தும் வாய்போ அமையவில்லை.

பல வருடங்களுக்கு முன் (தமிழ்நாட்டு) ஒரு கோவிலில் செருப்பை அதற்க்கான பாதுகாப்பகத்தில் விட்டேன். அங்கிருப்பவர் அதற்க்குக் கட்டணமாக 50 பைசா கேட்டார். அப்போதெல்லாம் அதற்க்கு 25 பைசா தான். நான் தயங்கியவாரே 50 பைசாவை அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அப்போது கண்ணில் பட்டது அந்த அறிவிப்புப் பலகை "செருப்புக்குக் கட்டணம் 25 பைசா". உடனே, செருப்புக்காப்பாளரிடம் அதைக்காட்டி "ஏன் அதிகம் வாங்குகிறீர்கள்" என்று கேட்டேன். அவர் "நிரம்பப் பணம் போட்டு குத்தகை எடுத்துள்ளோம். அதனால் 50 பைசாதான் " என்றார். இருந்தாலும் மனசு கேக்கலை. அங்குள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரிக்கச் சென்றேன். இதற்க்காவே காத்திருந்தவர்போல, அங்குள்ள அதிகாரி "ஆமாம் சார் 25 பைசாதான். ஆனால், குத்தகைதாரர் அதிகமாத்தான் வசூலிக்கிறார். அதனாலதான் நாங்களே(அறநிலையத் துறை) அதை எடுத்து நடத்தலாம்னு இருக்கோம். அதுக்கு குறைந்தது 20 (எழுத்துப்பூர்வமான) புகார்கள் தேவை. அந்தப் புகார்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, நாங்களே அதை நடத்துவதற்க்கு அனுமதி பெறணும். இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நீங்களும் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்" என்றார். பின் அவ்வாறே செய்தேன். நான் அவ்வூரிலோ, அருகிலோ குடியிருந்து இருந்தால், மீதி 10 புகார் கடிதங்களையும் மற்றவர்களிடமிருந்து நானே பெற்றிருப்பேன்!

டோண்டு அவர்கள் தன் பதிவில் தான் மும்பையிலிருக்கும்போது தவறாகக் காட்டிய போக்குவரத்து சிக்னலை, புகாராகத் தெரிவித்ததாகவும், மறுநாளே அது சரி செய்யப்பட்டதாகவும் சொல்லியிருந்தார்.

சரி சரி,முன்னுரை போதும்,விஷயத்துக்கு வா என்கிறீர்களா. இதோ வந்துட்டேன்.

இதுவரை 5 விடயங்களில் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயம் போன்றவற்றில் புகார் செய்து, இறையருளால், அக்குறைகள் நிவர்த்தியாகியுள்ளன. ஒரு முறை கடைக்காரரிடம் சுமார் 15 நிமிடம் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் பற்றி பேசியே, குறைகள் நிவர்த்தியாயுள்ளன. அதில் ஒவ்வொன்றாகப் பார்போம்.

Wednesday, January 23, 2008

24.01.2008 தமிழ்ச் சங்கத்துக்கு ஸ்பான்சர் பிடித்தது - கவுண்ட்ஸின் பிச்சைக்கார காமெடி

தமிழ்ச்சங்கம் பொதுக்கூட்டத்துக்கு நம்மாலான உதவியைச் செய்வோமேன்னு, நோட்டீஸ் அடிக்கறது, அத தெரிஞ்வங்களுகுக் கொண்டுபோய்க் கொடுக்கிறது,ஸ்பான்ஸர் பிடிக்கிறது கடந்த ஒரு வாரமா இதே வேலைதான்.

இங்கு தமிழரால் புதிதாக ஆரம்பிக்கபட்ட உணவகத்தில் சங்க நிர்வாகியை அழைத்துக்கொண்டு அவர்களால் ஏதாவது ஸ்பான்சர் செய்ய முடியுமா என்று கேட்கப்போனேன். கடை நிர்வாகியை, சங்க நிர்வாகிக்கு அறிமுகப்படுத்தும்போது,அவர் தாந்தான் இந்தக்கடைக்கு முழுபோறுப்பு என்றார்.

அது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் விளம்பரத்துக்காக அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினோம். பொதுக்கூட்டத்துக்கு 100 பேருக்குக் குறையாமல் வருவார்களெனெ எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு இனிப்பு,காரம்,டீ/காபி வேண்டும் என்றோம். கடை நிர்வாகியும் மிக மகிழ்ச்சியுடன் சரி என்றார். அப்போது இரவு மணி 11. நாங்களும் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்துட்டோம்.

மறுநாள் காலையில் அந்தக்கடை நிர்வாகி செல்பேசியில் அழைத்து, அவ்வாறு முழுவதுமாக இலவசமாக கொடுப்பது கட்டுபடியாகாதென்றும், வேண்டுமானால் 50 சதவீத விலைக்குறைப்பு செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். அவர், தாம் கடை முதலாளியுடன் இது பற்றி பேசியதாகவும், அவர் முழுதுவதுமாக இலவசமாகக் கொடுப்பதற்கு ஒப்பவில்லை என்றும் சொன்னார். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரிடமும் இதற்க்கெல்லாம் சந்தாவாக ஆளுக்கு இவ்வளவு என்று பணம் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.பொதுகூட்டத்துக்கு நம்மாட்கள் வர்ரதே பெரிசு. பிறகு எங்கே அவர்களிடம் பணம் கேட்க.

நாங்கள் சொன்ன பொருட்களுக்கு செலவு ரூ.1500க்கு மேல் ஆகாது. அந்த உணவகத்துக்கு அவர்கள் ரூ.15 லட்சத்துக்குமேல் செலவு செய்திருப்பதாக அறிகிரேன். அவ்வுணகத்தில் ஒரு அப்பளம் ரூ.7 என்றால் எவ்வளவு விலை உயர்ந்த உணவகம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அவர்கள் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.

1.ஆனால், முதல் நாள் இராவு சரி என்று சம்மதிது விட்டு மறு நாள் ஏன் மறுக்க வேண்டும்? அவ்வாறு தன்னால் முடிவு எடுக்க முடியவில்லை எனில்,ஏன் உடனே சரியென சொல்ல வேண்டும்? கடை முதலாளியிடம் தான் கேட்டு சொல்வதாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கடை முதலாளியும் அங்கு வந்தார். அவரிடம் கடை நிர்வாகியும் நாங்கள் எதற்க்காக வந்துள்ளோம் என்பதைத் தெரிவித்தார்.

2.தன்னால், ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாதபோது அவர் எதுக்காக தாந்தான் அந்தக்கடைக்கு முழுப்பொறுப்பு என்று சொல்ல வேண்டும்? அதன் பின் வேரொரு கடையில் நான் இதேமாதிரி ஸ்பான்சர்சிப் கேட்டபோது, அவர் தான் தன் தங்கமணியுடன் பேசிவிட்டு சொல்வதாகத் தெரிவித்தார். அதேமாதிரி தான் யோசிச்சு சொல்வதாக சொல்ல வேண்டியது தானே.

இதைப்பர்க்கும்போது ஒரு படத்தில் கவுண்டமணியின் ஒரு காமெடிதான் ஞாபகம் வருது. கவுண்டமணி பிச்சைக்காரனாய் ஒரு வீட்டில் பிச்சை கேட்பார். வீட்டுக்காரர் தன்னிடம் பிச்சை போடுவதற்க்கு ஒன்றும் இல்லை என்பார். உடனே,அவரிடம் கவுண்ட்ஸ் அப்படி எனில் அவரையும் தன்னுடன் பிச்சைக்கு வரசொல்வார். ஏனெனில்,வீட்டுக்காரரிடமும் ஒன்றும் இல்லை,தன்னிடமும் ஒன்றும் இல்லை என்பார்.

மேற்சொன்ன விடயம் அவ்ளோ பெரிய விடயமா? உங்களுக்கு ஒரு மேலதிக க்ளு. உணவகத்தில், கடை நிர்வாகியும்,கடை முதலாளியும் ரொம்ம ரொம்ப நெருங்கிய சொந்தம். அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு சரியா யூகிக்கிரவுங்களுக்கு இனிப்பு,காரம் பரிசு. அது உங்க செலவுல பார்சல் அனுப்பபடும்.