Monday, February 11, 2008

11.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 2

முத முதல்ல நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பை அணுகிய அனுபவமாதலால் சுய புராணம் கொஞ்சம் நீளமா இருக்கும். பொறுதருள்க.

1998ல் நான் வெளிநாடு போக வேண்டியிருந்தது. கம்பித் தொலைபேசி(landline) இணைப்பைத் தொலைத் தொடர்புத் துறையிடம் (அப்போது அது BSNL ஆக மாறியிருந்ததா என்று நினைவில்லை) சொல்லி துண்டிக்கச் சொல்ல வேண்டும், மாதா மாதம் தொலைபேசிக்கான வாடக்கைக் கட்டணம், திரும்ப வரும்வரை கட்ட வேண்டாமென்றால். நல்ல வேளையாக வீட்டுச் சொந்தக்காரர், தொலைபேசி இணைப்பை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும்படியும், தான் அதை உபயோகப்படுத்தி விட்டு, தானே அதற்க்கான கட்டணத்தை தொலைதொடர்பு துறையிடம் அவ்வப்போது கட்டி விடுவதாகச் சொன்னார். இதுவும் நல்லதாகப் பட்டபடியால், அப்படியே செய்தேன். வேலையை முடித்துக்கொண்டு திரும்பியவுடன் தான் தெரிந்தது. வீட்டுச்சொந்தக்காரர் கடைசி 4,5 மாதங்களுக்கு தொலைபேசி கட்டணத்தைக் கட்டாததால் இணைப்பு ஏற்க்கனவே துண்டிக்கப்பட்டு விட்டது என்று. பின், தொலைத் தொடர்புத் துறைக்குச் சென்று கட்ட வேண்டிய நிலுவைத் தொகைகளையெல்லாம் கட்டிவிட்டு மறுபடி இணைப்பு கிடைக்கக் காத்திருந்தேன். 2 மாதங்கள் ஆயிற்று. இணைப்பு மறுபடியும் கிடைத்தபாடில்லை. அதைப் பற்றிய எந்தக் கடிதமும் அவர்களிடமிருந்து கிடைத்த பாடில்லை.

தொலைத்தொடர்புத் துறைக்குச் நேரடியாகச் சென்றேன். அக்கௌண்ட்ஸ் துறைக்குச் சென்றால், கமர்ஷியல் துறைக்கும், அங்கு சென்றால் அக்கௌண்ட்ஸ் துறைக்கும், மாற்றி மாற்றி அலைக்கழித்தார்கள். இப்படியே நாலைந்து மாதங்கள் ஆய்விட்டன. 5,6 முறை அங்கு போன பின் புரிந்தது, நான் நிலுவைத்தொகையைக் கட்டியபின், அந்த விபரங்கள் கணிணியில்(database) அவர்களால் பதியப்படவில்லை என்று. கடைசியாக அவர்கள் அதையும் செய்த பின், இணைப்பு மீண்டும் கிடைத்தது. இப்போது சுமார் 1 வருடம் ஓடிவிட்டது.

மனசுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு தடவை அலைந்தது, இணைப்புக் கிடைக்காமல் போனது, இணைப்பு இல்லா சமயங்களிலும் அதற்க்கான கட்டணத்தைக் கட்டியது எல்லாம்.

செய்தித்தாளில் அவ்வப்போது நுகர்வோர் குறைம் தீர்க்கும் அமைப்பைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக அதன் முகவரியைக் கண்டுபிடித்து, நடந்ததை தெளிவாக, புகாராக, எழுதி அனுப்பியவுடன், புகார் கிடைத்ததற்க்கான கடிதமும், அவ்வழக்கு இன்ன தேதியில் விசாரணக்கு வருமென்றும், அதற்க்கு நேரில் வரவேண்டுமென்ற விவரங்களும் அதில் இருந்தன.

சொன்ன தேதியில் அங்கு சென்றேன். நான் அப்போதுதான் மூச்சிரைக்க (7 மாடி என்று நினைவு) மாடி ஏறி, வழக்கு நடக்கும் அறை வாசலில் நின்றேன். அப்போதுதான் என் பெயர் அழைக்கப்பட்ட்டது. என் பெயரை சொல்லி , என்னுடைய வழக்கா என்று கேட்பதற்க்காக என் கையைத் தூக்கினேன். என் பெயரை அழைத்தவர் "நீங்கள்தான் ....."என்று கேட்க , நான் ஆமென சொல்லி உள்ளே நுழைந்தேன்.

இது வரை படங்களில் மட்டுமே பார்த்த கோர்ட்டு இருந்தது. சுமார் 1அடி உயர மேடை. அதில் பெரிய மேசை. அதன் பின் 3 நீதிபதிகள், அதில் 2 ஆண்கள், 1 பெண் உக்கார்ந்து இருந்தனர். ஆனால், சினிமாவில் வரும் கோர்ட்டில் உள்ளதுபோல் நீதிபதியெல்லாம் கறுப்பு கோட்டு எல்லாம் அணிந்திருக்கவில்லை. சாதாரண சிவிலியன் உடையில்தான் இருந்தனர். வக்கீல் யாரும் இருந்ததாக நினைவில்லை. மற்ற வழக்காடிகள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். குற்றவாளி கூண்டு எல்லாம் இருக்கவில்லை. அந்த அறை, பள்ளி/கல்லூரி வகுப்பறை மாதிரி இருந்தது. அதன்பின் அந்தப்பெண் நீதிபதி , என்ன விஷயம்(புகார்) என்றார். என் புகாரில் சொல்லியிருந்ததைச் சொல்லி, இந்த மாதிரி, தொலைத்தொடர்புத் துறையின் கவனக் குறைவால், எனக்குக் காலதாமதம் ஏற்ப்பட்டதையும், அபராதக்கட்டணம் கட்ட வேண்டியதையும் சொன்னென். அவர்கள் மூவரும் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டனர். பின், அப்பெண் நீதிபதியிடம், நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அவர் "நீங்கள் போகலாம். நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார். சில மாதங்களில் நான் கட்டிய அதிகப்படியான தொகைக்கு ஈடான கிரெடிட் கடிதம் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து வந்ததது. பின் வரும் மாதங்களில் அப்பணம் அந்தந்த மாத கட்டணங்களில் சரி செய்யப்படும் என்று.

பின் நான் மறுபடியும் குறை தீர்வு மன்றத்திற்க்கு கடிதம் எழுதினேன், எனக்கு நட்ட ஈடு வேண்டுமென. அக்கடிதத்திற்க்கு, தொலைத் தொடர்புத் துறையிலிருந்து கடிதம் வந்தது. நான் சொல்வதற்க்கு(தாமதமானதற்க்கு) எந்த ஆதாரமும் இல்லையென்றும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்.

என்னிடம் அதற்க்கான ஆதாரம்(ஓவ்வொரு முறை தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாருக்கென அத்தாட்சி) இல்லை என்பதாலும், இதற்க்குமேல் பிரச்னையை வளர்த்துக்கொண்டு போவதால் உபயோகம் இல்லை என்று பட்டதாலும், வழக்கை முடித்துக்கொளவதாக குறை தீர்ப்பு ஆணையகத்துக்கு கடிதம் எழுதினேன்.

12 comments:

மங்களூர் சிவா said...

சபாஷ்ணா!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க, மங்களூர் சிவா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ummaippl naalu per...vendam.. vendam neer oruvare podhum..

Sabash

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க ராதாகிருஷணன்,
நன்றி.
எனக்கு அண்ணன்களெல்லாம் இருக்காங்க. அவங்களையும் அவங்க அனுபவத்தைப் ப்ளாக்ல போடச்சொல்லி கேட்ருக்கேன். பாக்கலாம்.

தென்றல் said...

ம்ம்ம்...Great.. Siva!!

பாச மலர் / Paasa Malar said...

புகார்ப் பெட்டியாவது ஒண்ணாவது..எதுவும் சரி வராது...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க பாசமலர்,
<==
பாச மலர் said ...
புகார்ப் பெட்டியாவது ஒண்ணாவது..எதுவும் சரி வராது...
==>
நீங்க சொல்ரதப்பார்த்தா "இந்தியன்" கமல் மாதிரி ஆகணும்போல.

நேற்றுத்தான் ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த்த தீர்ப்பாயம், பெங்களூரிலிருந்து என் புகாரிலுள்ள ஒரு குறை தீர்க்கப்பட்டதாகவும், அதற்க்கான தொகை(ரூ.22,000க்கும் மேல்) என் கணக்கில் வரவு வைக்கப்பட்டத்தாகவும் கடிதம் வந்தது.

பாச மலர் / Paasa Malar said...

//நேற்றுத்தான் ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த்த தீர்ப்பாயம், பெங்களூரிலிருந்து என் புகாரிலுள்ள ஒரு குறை தீர்க்கப்பட்டதாகவும், அதற்க்கான தொகை(ரூ.22,000க்கும் மேல்) என் கணக்கில் வரவு வைக்கப்பட்டத்தாகவும் கடிதம் வந்தது.//

வாழ்த்துகள்

Unknown said...

Nice times

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க மோகன், அப்பப்ப இங்கே வந்து போங்க.

Tech Shankar said...

ஒரு பக்கம் பங்குச் சந்தை பற்றி பலே பலே தகவல்களும்,
மறுபக்கம் வெட்டி அரட்டை என்று பயங்கரமான பதிவுகளும் தந்து அசத்துரீங்க பாஸ்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க தமிழ் நெஞ்சம். வரவுக்கு மிக்க சந்தோஷம். அப்பப்ப இங்க வந்து போங்க.